நாமக்கல்
இன்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை 51 வது நினைவு நாளை ஒட்டி அவரது பெயரில் இருக்கும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கலை கல்லூரி முன்பு இருக்கும் அவரது மார்பளவு திருஉருவ சிலைக்கு நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை சார்பாக மாலை அணிவிக்கப்பட்டது
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை சார்பாக நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் 51 வது நினைவு நாளை ஒட்டி நாமக்கல் – திருச்சி சாலையில் இருக்கும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் முன்பு இருக்கும் அவரது மார்பளவு திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை சார்பாக இந்த நிகழ்ச்சிக்கு தங்கம் மருத்துவமனை மருத்துவர் இரா. குழந்தைவேல் தலைமை வகித்தார்
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் மா. கோவிந்தராசு இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை தலைவர் எஸ். சுரேஷ், செயலாளர் ஆர். வசந்தகுமார் ,சட்ட ஆலோசகர் எஸ்.ஏ.நாகராஜன் , எம் முருகானந்தம் ,எஸ். கனகராஜன், டி. மேகநாதன் ஆர் பூபதி, ஏ. ஆதித்தன்,ஜே. கார்த்திகேயன் பி .சந்துரு, சக்திவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்