பாரதிய மஸ்தூர் சங்கம் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக பொதுக்கூட்டம்
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் பாரதிய மஸ்தூர் சங்கம் மற்றும் அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது
இந்த பொதுக்கூட்டத்திற்கு பாரதிய மஸ்தூர் சங்கம் மாவட்ட தலைவர் அன்பழகன், தலைமை தாங்கினார்கட்டுமான சங்க ஒன்றிய தலைவர் ரவிக்குமார், முன்னிலை வைத்தார்.மாவட்டச் செயலாளர் ரமேஷ், பொதுச் செயலாளர் கடவூர் கார்த்திக்செயல் தலைவர் திருமலை கண்ணன்,
பேராசிரியர் பெருமாள் ராஜாமணி,,தமிழ்நாடு வணிகர் சங்க மாநிலத் துணைத் தலைவர் தொழிலதிபர் எஸ்.டி.எம். செந்தில்குமார், ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்
மாநில அமைப்பு செயலாளர்வக்கீல் ஸ்ரீமான்தங்கராஜ்,ஜீ,
துணைத் தலைவர் பாலு, பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன், விவசாய அணி மாநில துணைத்தலைவர் சோழவந்தான் மணிமுத்தையா,
மக்கள் சேவை பிரிவு சந்தோஷ்சுப்பிரமணியன், அமைப்புசாரா தொழிலாளர் மக்கள் சேவகப்பிரிவு செல்வஅருண்குமார், தொழிலதிபர் இடையபட்டி சௌந்தரபாண்டியன், ஈஸ்வரன், உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
இதில் பாஜக அலங்காநல்லூர் மண்டல தலைவர் சுபாஷ் சந்திர போஸ், சக்திகேந்திர பொறுப்பாளர் குறவன் குளம் கார்த்திக், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.. இந்த
கூட்டத்தில் குடியிருப்பு இல்லாத கட்டிட தொழிலாளர்களுக்கு அரசு ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஐந்து சதவீதம் இலவச வீட்டு மனை பட்டா வழங்க தமிழ்நாடு அரசே கேட்டுக் கொள்கிறோம்நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமான உறுப்பினர்களுக்கு இஎஸ்ஐ பிடித்தம் செய்து மருத்துவ வசதி வழங்குவது போல் நலவாரிய ஆண்டுசந்தாவோடு இஎஸ்ஐ க்கு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்து கட்டுமான உறுப்பினர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ வசதி செய்து தர மாநில அரசு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தொடர்ந்து மணிகண்டன் நன்றி கூறினார். இதற்கு முன்னதாக கேட்டுகடை பகுதியில் சங்க நிர்வாகிகள் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.