தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது

இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

வட்டார குழு விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான கையுந்து பந்து போட்டியில் ஜீனியர் பிரிவும், எறிபந்தாட்டத்தில் ஜீனியர் பிரிவும் பூப்பந்தாட்டத்தில் ஜீனியர், சீனியர் பிரிவும் வளயகப்பந்தில் ஜீனியர், சீனியர், சூப்பர்சீனியர் பீரிவும், இறகுபந்து விளையாட்டில் ஜூனியர், சீனியர் பிரிவும் ஆண்கள் பிரிவில் பூப்பந்தாட்டத்தில் ஜீனியர், சீனியர் பிரிவும் இறகுபந்து விளையாட்டில் ஜீனியர் பிரிவும் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு
தடகளப் போட்டியில் ஹரினி ,வென்சியா, செல்வநேசன், சஞ்சய், சூப்பர் சீனியர் பிரிவிலும், ஜெயசூர்யா, கவின், சஞ்சய், ராஜகுமரன், சீனியர் பிரிவிலும், தேவதர்ஷன், மேகவர்ஷி, ஜீனியர் பிரிவிலும், வெற்றி பெற்று தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் . செந்தில்குமரன், நிர்வாக இயக்குநர். செ. நித்யதாரணி, முதல்வர் செல்வி, உடற்கல்வி ஆசிரியர் ரூபதுரை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *