தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் தலைமையில்
நடைப்பெற்றது.

வேளாண்மை உழவர் நலத்துறையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2023-24 திட்டத்தின் கீழ் பழச்செடிகள் தொகுப்பு 75% மானியத்தில் செங்கோட்டை வட்டார விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

தேசிய தோட்டக்கலை இயக்கம் – 2023-24 பரப்பு விரிவாக்கம் இனத்தில் மா ஒட்டுக் கன்றுகள் ஆலங்குளம் வட்டார விவசாயிகளுக்கும் மற்றும் சின்ன வெங்காய விதைகள் செங்கோட்டை வட்டார விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது.

வாசுதேவநல்லுார் மற்றும் சங்கரன்கோவில் வட்டார தோட்டக்கலை துறையினர் ஏற்பாடு செய்திருந்த விவசாயி கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.

இவ்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ஊமைத்துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகம்மாள், (தோட்டக்கலை துணை இயக்குநர்) ஜெயபாரதிமாலதி, ( வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் ) சுப்பையா, (வேளாண்மை பொறியியல் துறை ) சங்கர் மற்றும் அனைத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *