தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் ஜோ.லியோ.

சரபோஜி மன்னரின் 24 6 வது பிறந்தநாள் விழா.

தஞ்சையில் சோழ மன்னர்களுக்கு பின், நாயக்கர்களும் அவர்களுக்கு பிறகு சரபோஜி மன்னர் ஆட்சி காலம் நடைபெற்றது. சரபோஜி மன்னரின் 246 ஆவது பிறந்தநாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடன் சரஸ்வதி மஹால் நிர்வாக அதிகாரி பாலதண்டாயுதபாணி, போட்டியில் துறை மணிமாறன் மற்றும் சரஸ்வதி மஹால் ஊழியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்வுக்கு பின் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சரஸ்வதி மஹால் நூலக இயக்குனருமான தீபக் ஜேக்கப், சரபோஜி மாணவரின் 246 ஆம் ஆண்டு பிறந்த நாள் முன்னிட்டு நூல் ஆய்வாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் பயன்படும் வகையில் சரஸ்வதி மஹால் நூலகம் வெளியிடும் நூல்களுக்கு சிறப்பு சலுகையாக 31-3-2016, க்கு முன்பு வெளிவந்த நூல்களுக்கு 50 சதம், தள்ளுபடியும் அதற்குப் பிறகு வெளிவந்த நூல்களுக்கு 10 சதம், தள்ளுபடியும் அளித்து 24-9-2023 முதல் 31-10-2023 வரை விற்பனை செய்யப்பட உள்ளது.

பன்மொழி இலக்கிய, இலக்கண நூல்களையும், கோயில்கலை, சோதிடம், மருத்துவம், நாட்டியம், இசை, நாடகம், கணிதம், வாஸ்து போன்ற துறை சார்ந்த நூல்களையும் இந்த வாய்ப்பினை படுத்திக் கொண்டு வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *