கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் இருந்து குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்று மாரப்படைப்பால் இறந்த தன் கணவரின் உடலை தமிழக முதல்வர் மீட்டுதரக்கோரி மனைவி கண்ணீர் மல்க வேண்டுகோள்….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோயிலை அடுத்த மாத்தூர் கிராமத்தைச் சார்ந்த திரு முருகேசன் என்பவர் குவைத் நாட்டில் எலக்ட்ரீசியன் ஆக வேலைக்கு சென்று கூலி வேலை பார்த்து வந்தவர் நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி காரணமாக இறந்துவிட்டார் என அவருடைய மனைவி சத்யாவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் சிறு வயதில் உள்ளனர் இந்நிலையில் குடும்ப வறுமைக்காக வேலைக்கு சென்று இறந்த தன் கணவரின் உடலை மீட்க போதுமான பொருளாதாரம் இல்லாததால் குவைத் நாட்டில் இறந்த தன் கணவர் முருகேசனின் உடல் குவைத் நாட்டில் இருந்து அவரது கிராமத்திற்கு கொண்டு வருவதற்கான உதவிகளை தமிழக முதல்வரும் மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *