கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று பெய்த கனமழையால் வால்பாறை அண்ணாநகர் பகுதியில் இரண்டு வீடுகள் இடிந்து சேதமானது தகவலறிந்த வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அப்பகுதிக்கு நேரில் சென்று வால்பாறை நகரச்செயலாளர் மயில் கணேசன், துணைச்செயலாளர் எஸ்.பி.பொன்கணேசன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்
அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அமுதா மற்றும் பெயிண்டர் ஆறுமுகம் ஆகியோரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார் இந்த ஆய்வின் போது நிர்வாகிகள் சண்முகவேல், எஸ்.கே.எஸ்.பாலு, எம்.ஆர்.எஸ்.மோகன், காய்கடை சசிக்குமார், லோகேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்