வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் பகுதியில் விழுதியூர் கிராமத்தில் பழச் செடி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, தேவைப்படுவோர் விண்ணப்பிக்க தோட்டக்கலை அதிகாரி அழைப்பு.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் பகுதியில் உள்ள, சேதனிபுரம் ஊராட்சி விழதியூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்டம் (2023-2024)தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை மூலம் பழச்செடி தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர் முன்னிலை வகித்தார்,தோட்டக்கலை உதவி இயக்குனர் திருச்செல்வன், தோட்டக்கலை அலுவலர் பிரதீப், உதவி தோட்டக்கலை அலுவலர் சிவமணி, உதவி வேளாண்மை அலுவலர் சிவக்குமார் (திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்) ஆகியோர் கலந்துகொண்டு பயிர் சாகுபடி வேளாண்மை தொழில்நுட்ப அறிவுரைகளை எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில் மா-1 எண், கொய்யா-1எண், எலுமிச்சை -2 எண், நெல்லி-1 எண், சீதாப்பழம்-1 எண் என்றவாறு மொத்தம் ஆறு செடிகள் அடங்கிய தொகுப்புஒன்றின் மொத்த மதிப்பு ரூபாய் 200 , அரசு மானிய மதிப்பு ரூபா 150,பயனாளிகள் பங்களிப்பு தொகைரூபாய் 50ம் உள்ளவாறு பயனாளிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் 300 பயனாளிகள் ஆர்வமுடன் தொழில்நுட்ப ஆலோசனைகளை கேட்டு பழச் செடி தொகுப்புகளை வாங்கி சென்றனர். மேலும் பழச் செடி தொகுப்பு தேவைப்படுவோர் உழவன் செயலி மூலமாகவும், www.tnhorticulture.tn.gov. என்ற இணையதளம் மூலமாகவும் அல்லது வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களை அணுகி மானிய திட்டங்களில் பயன் பெறலாம் என்று குடவாசல் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *