பாபநாசம்செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.
பாபநாசம் தாலுக்கா அலுவலகம்
முன்பு ராஜகிரி ஊராட்சியில் நிலமற்ற ஏழைக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சமைத்து, உறங்கி காத்திருப்பு போராட்டம்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ராஜகிரி ஊராட்சி பெரியார் தெரு நத்தம் புறம்போக்கில் அந்தப் பகுதியில் நிலமற்ற நிலையில் குடியிருந்து வரும் ஏழைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தியும்,
பெரியார் தெரு சுடுகாட்டிற்கு மயான கொட்டகை அமைத்து தர வலியுறுத்தியும் , தொகுப்பு வீடுகள் கட்டித்தரக் கோரியும் , பாபநாசம் பேரூராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அக்கட்சியினர் பாத்திரங்களை வைத்து சமைத்து, உண்டு, உறங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு ராஜகிரி கிளைச் செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் ஜான்சன் ராஜேந்திரன், ஸ்டீபன், சுதாகர், ஸ்ரீநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட குழு உறுப்பினர் காதர் உசேன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் முரளிதரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள்
சேக்அலாவுதீன் , செல்வகுமார், ஜார்ஜ் , மகேந்திரன் , ராமதாஸ்,சீனிவாசன், தொழிலாளர் சங்க தலைவர் இளங்கோவன், மாதர் சங்க செயலாளர் கஸ்தூரிபாய் மற்றும் மாதர்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
பின்னர் போராட்ட குழுவினருடன் பாபநாசம் வட்டாச்சியர் பூங்கொடி, பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி , வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் நீலகண்டன், மணிமாறன் ஆகிய கலந்து கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ஈடுபட்டனர். நத்தம் பும்போக்கில் நிலமற்ற ஏழைகளுக்கு பட்டா வழங்கப்படும் என தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.