எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, மயிலாடுதுறை மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டி சீர்காழி விவேகானந்தா பள்ளி மைதானத்தில் தொடங்கியது.
மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பாக சீர்காழி தனியார் பள்ளி மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் விதமாக இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி தலைமையேற்றும், விவேகானந்தா பள்ளி குழுமங்களின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஒலிம்பக் கொடியை ஏற்றி போட்டியினை தொடங்கி வைத்தார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் போட்டியானது 400 மீட்டர், 200 மீட்டர், 100 மீட்டர், ஜாவ்லின், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தரங்கம்பாடி, மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த 700 மாணவ மாணவிகள் விளையாட்டில் கலந்து கொண்டார்கள்.