சோழவந்தானில் பேரூராட்சி கணக்கெடுப்பு
பயிற்சி முகாம்
சோழவந்தான்
மதுரை மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளில் தூய்மை பணிதொடர்பான கணக்கெடுப்பு பயிற்சி முகாம் சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள.தனியார் திருமண மகாலில். நடந்தது.
இந்த பயிற்சி முகாமிற்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன் தலைமை தாங்கினார். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒன்பது பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் முதல் நிலை உதவியாளர்கள் பரப்புரையாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் பயிற்சி முகாமில் கணக்கெடுப்பு குறித்து பயிற்சி வழங்கினார்