கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் ஆலோசனைக்கு இணங்க வால்பாறையிலுள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
இந்நிகழ்ச்சியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எவ்வாறு விண்ணப்பிப்பது, எவ்வகையான தகவலை கோரலாம், எந்த நோக்கத்திற்காக சட்டம் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார், துப்புரவு ஆய்வாளர் வீரபாகு ஆகியோர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் இளங்கோவன், நித்யானந்தன், சுதாகர், களப்பணி உதவியாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் ஜெயந்தி, பிரசன்னா, மாரியம்மாள் மேற்பார்வையாளர் ராம், ராகவன் ஆகியோர் செய்திருந்த நிலையில் பள்ளி மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சி முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் நகராட்சி அலுவலர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி கூறினார்