திருவள்ளூர்
பொன்னேரி தீயணைப்பு நிலை யம் சார்பில் தகவல் அறியும் உரி மை சட்டம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட சின்னக்காவனம் பகுதியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை நிலையம் உள்ளது.
அடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தீயணைப்பு நிலையம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வை மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களு க்கு ஏற்படுத்துமாறு விளக்கி பேரணி நடத்த உத்தரவிட்டிருந்தது அதன்படி பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலை மையில் நேற்று பொன்னேரி அர சினர் ஆண்கள் மேல்நிலைப் பள் ளியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. முன்னதாக இப் பேரணி அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் இருந்து ஊர்வ லமாக சென்றது.
இப்பேரணியை பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நடத்தி விழிப் புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியில் மாணவர்கள் விழிப்புணர்வு பலாகைகளை ஏந்தி சென்றனர் இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி பெரிதும் பயனுள்ளதாக இருந்து குறிப்பிடத்தக்கதாகும்.