கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிபட்டியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா தலைமை வகித்தார்.
பள்ளி மேலாண்மை குழு துணை தலைவி வேதநாயகி, வார்டு உறுப்பினர் கலா ராணி முன்னிலை வகித்தனர்.கல்வியாளர் மருத்துவர் சாமிநாதன் நமது பள்ளியில் சிறந்த பள்ளிக்கான விருது பெறுவது குறித்து பேசினார்.
ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் நடைபெறக்கூடிய வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், ஊராட்சி மூலம் பள்ளிக்கு செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட இல்லம் தேடிக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் கலையரசன் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பள்ளி மேலாண்மை குழு இணைந்து செயல்பட்டு குழந்தைகளின் அடிப்படை உரிமைகளான கல்வி பாதுகாப்பு வளர்ச்சி போன்றவற்றிற்கும் பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவிட துணை குழுக்கள் அமைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
மாற்றுத்திறன் உடைய குழந்தைகளை கண்டறிவது குறித்தும் ஒன்றியத்தில் நடைபெறும் மருத்துவ முகாம் குறித்தும், இல்லம் தேடிக் கல்வி மையத்தில் நடைபெறும் கற்றல், கற்பித்தல் முறை குறித்தும் கலந்துரையாடல் செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, ஆசிரியர்கள் மணிமேகலை செல்வி ஜாய்,
வெள்ளைச்சாமி , தனலெட்சுமி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.