பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மருதூர் கிராமத்தில் தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் மற்றும் கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவையின் சார்பாக விஸ்வகுல பூசனம் காப்பாளர் ஆர் எம் எஸ் அவர்களின் வழிகாட்டுதலின் படி மருதூர் கிளைச் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மருதூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
இதில் விஸ்வகர்மா தொழிற்சங்க பேரவை உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்குதல் , சங்கம் மற்றும் சமுதாய வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம், மற்றும் பாரதப் பிரதமர் அவர்களின் விஸ்வகர்மா யோஜனா திட்ட செயல்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் மருதூரில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட தலைவர் தில்லைநாயகம் தலைமை தாங்கினார், ராதாகிருஷ்ணன் ஆச்சாரியார் ரவிச்சந்திரன் ஆச்சாரியார் சேகர் ஆச்சாரியார் ராஜேந்திரன் ஆச்சாரியார் முருகன் ஆச்சாரியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார்
இந்த ஆலோசனை கூட்டத்தில் அரியலூர் மாவட்ட பாஜகவின் மாவட்ட துணைத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி , சந்திரகலா மருத்துவர் பிரிவு மற்றும் சிந்தனையாளர் பிரிவு மரு பரமேஸ்வரி, கார்த்திகேயன் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜராஜன் ஒன்றிய தலைவர் நீலமேகம் ஒன்றிய பொதுச் செயலாளர் குவாகம் பரமசிவம் ஆகியோர் கிளை சங்க நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழாவில் தொழில் சங்க பேரவை உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி சமுதாய வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.
இதில் கைவினைஞர்கள் தொழிற்பெயரவை மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஆறுமுகம் மத்திய மண்டல செயலாளர் ராசு சக்திவேல் சிறப்புரையாற்றினர் மாவட்ட துணைத் தலைவர் வீராசாமி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்
இந்நிகழ்வில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்கள் கோ. ஐயாரப்பன் , நடராஜன் மாவட்ட பொது செயலாளர்கள் மகாலிங்கம் , ஜெயக்குமார் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவாக மணிகண்டன் ஆசாரியார் நன்றியுரை வழங்கினார்