அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக மன நல நாள், சர்வதேச பெண்குழந்தைகள் தினம்,வெண்புள்ளி உறுதிமொழி என முப்பெரும் விழா நடைபெற்றது.
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தரவக் கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக மனநல நாள், சர்வதேச பெண்குழந்தைகள் குழந்தைகள் தினம், வெண்புள்ளிகள் உறுதிமொழி என முப்பெரும் விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி அனைவரையும் வரவேற்றார்.கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை உலக மன நல நாள் குறித்து பேசியதாவது உலக மனநல தினத்தின் ஒட்டுமொத்த நோக்கமானது, உலகெங்கிலும் உள்ள மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மனநலத்திற்கு ஆதரவாக முயற்சிகளைத் திரட்டுவதும் ஆகும்.இந்த ஆண்டுக்கான உலக மனநல நாள் கருபொருளாக, “மனநலம் என்பது உலகளாவிய மனித உரிமை” என அமைந்துள்ளது.
இதன் மூலம் மனநல ஆரோக்கியத்தை மனித உரிமையுடன் ஒப்பீட்டு கருபொருள் உருவாக்கப்பட்டுள்ளது.சர்வதேச பெண்கள் குழந்தைகள் குறித்து இல்லம் தேடி கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசியதாவது பெண் குழந்தைகளை மேம்படுத்துதல் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது
பெண்குழந்தைகளின் சாதனைகளைக் கொண்டாடவும், அவர்களின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மீண்டும் உறுதிப்படுத்தவும் இந்த தினத்தை கடைபிடிக்கிறோம் என்று பேசினார்இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா, நிவின், வெள்ளைச்சாமி, தனலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.