நவக்கிரகங்களில் ஒன்றான ராகு பகவான் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாக நாதசுவாமி கோவிலில் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி ஆகிய இரு மனைவிகளுடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
அதனையொட்டி அவர், நாகநாதர் சுவாமிக்கு 9 விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டார். பின்னர், கிரிகுஜாம்பிகை சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார்.
அதை தொடர்ந்து திருபுவனத்தில் கம்பகரேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் சரபேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு தருமை ஆதீனம் சார்பில் சரபேஸ்வரர் படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *