ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை சார்பில் அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள் நாட்டியாஞ்சலி
ராகம் பிறந்து, தாளம் வளர்ந்த திருவாரூர் மண்ணில் அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோவிலில் நவராத்திரியின் முதல் நாளான அக்டோபர் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திருவாரூர் மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைசார்பில் மாவட்ட தலைவர் மன்னை ராசு.இளங்கோ அவர்களின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் சிவா ப்ரொடக்ஷன் நிறுவனர் சிவபிரிவீணா அவர்களின் 22 பேர் கொண்ட கலைஞர்களின் பரதநாட்டியம் மற்றும் வாய்ப்பாட்டு நிகழ்வானது நடைபெற்றது.
மாவட்ட கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் வழக்கறிஞர் ராஜ் (எ) கருணாநிதி அவர்கள் தலைமையில் மாவட்ட துணை தலைவர் ராம. கலைச்செல்வன், திருவாரூர் சட்டமன்ற தொகுதி மருத்துவர் அணி துணை ஒருங்கிணைப்பாளர் கே பி ரமேஷ்குமார் திருவாரூர் நகரம் 12 -வது வார்டு திமுக செயலாளர் ஐஸ்வர்யா சினிவாசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது நிகழ்வில்
சிறந்த இசை கலைஞர்களுக்கு மலர் கிரீடம், மலர் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
பரதநாட்டிய கலைஞர்கள் சிவபிரிவீணா சரவணன் அவர்களுக்கு திருவாரூர் நகர தி.மு.கழக பொருளாளர் நகர மன்ற உறுப்பினர் ரஜினிசின்னா அவர்களால் நடன பேரொளி என்ற விருது வனிதா இளஞ்சேரன் அவர்களுக்கு திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் தலைவர் மாரிமுத்து அவர்களால் கலைச்சுடர் என்ற விருதும் சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர் கருணாமூர்த்தி கந்தப்பன் அவர்களுக்கு எல்.ஐ.சி வளர்ச்சி அதிகாரி பிரபாகரன் அவர்களால் குரல் அரசன் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது