ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் நேரில் சென்று வாழ்த்து

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரளம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மூத்த மகன் ராஜேஷ் . இவர் சீனாவில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கத்தையும் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைத்து வீடு திரும்பிய ராஜேஷை பேரளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர் காமராஜ் சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்தார் மேலும் வெள்ளி காமாட்சி விளக்கு பரிசளித்து உற்சாகப்படுத்தினார்.

வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்திய முன்னாள் அமைச்சருக்கு ராஜேஷ் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்
நிகழ்வில் நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி. பி ஜி. அன்பு மற்றும் நன்னிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராம.குணசேகரன் பேரளம் பேரூராட்சி கழக செயலாளர் திலகம் சுந்தரமூர்த்தி ஒன்றிய குழு உறுப்பினர் சம்பத், நன்னிலம் பேரூர் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செல். சரவணன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *