திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற தர்ணா போராட்டத்தில், ஒப்பந்த தொழிலாளியை நிரந்தரம் செய்ய கோரியும், இ- டெண்டர் முறையை எதிர்த்தும் கண்டன கோஷங்கள் எழுப்பி நடைபெற்ற, தர்ணா போராட்டத்தில் COTEE திட்டத் துணைத் தலைவர்மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது, இந்த தர்ணா போராட்டத்தில், சிஐடியு மாவட்ட செயலாளர் முருகையன் துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார்,
நிகழ்வில் விளக்க உரையாக COTEE திட்ட செயலாளர் ராஜேந்திரன்,சி ஐ டி யு மாவட்டத் தலைவர் ஹனிபா, திட்ட தலைவர் சகாயராஜ் திட்ட பொருளாளர் முகேஷ், கோட்ட செயலாளர்கள் வீரபாண்டியன், வினோத் மற்றும் COTEE மாநில செயலாளர் ராஜா ராமன் தர்ணா போராட்டத்தை நிறைவு செய்தார்.