குடவாசல் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள, குடவாசல் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன்,திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.

போட்டிகளில் குடவாசல் ஒன்றியத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். வட்டார கல்வி அலுவலர்கள் குமரேசன், ஜெயலட்சுமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை செண்பகம் வாழ்த்துரை வழங்கினார். காண் கலை,நுன் கலை போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அகர ஒகையிலும், வாய்ப்பாட்டு இசை போட்டிகள் குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நாடகம் மற்றும் இசைக்கருவிகள் வாசித்தல் போட்டி வட்டார வளமையத்திலும், நடன போட்டிகள் மூலங்குடி புனித சூசையப்பர் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியிலும் நடைபெற்றது.

ஆசிரியர் பயிற்றுநர்கள் காத்த முத்து, மணிகண்டன், மணிக்கண்ணன், கவிதா, சிறப்பு ஆசிரியர்கள் வைர வேலன், ஜெயந்தி, ஏஞ்சலா தேவி, ரஷ்யா, வேணி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தி இருந்தனர்.

பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். இறுதியாக குடவாசல் வட்டார கலைத் திருவிழா போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் பிரபு நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *