பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
.

பாபநாசம் அருகே ராஜகிரி தான் ஸ்ரீ உபயதுல்லா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நிறுவனர் தின விழா…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ராஜகிரி தான் ஸ்ரீ உபயதுல்லா மெட்ரிக் குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நிறுவனர் தின விழா நடைபெற்றது.

பள்ளி தாளாளர் ஆர்.ஏ. நூர் முகமது தலைமை வகித்தார்.

உபயதுல்லா கல்வி தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் எஸ் .சுல்தான் இப்ராஹிம் ,பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் எம் .ஏ .முகம்மது பாருக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதுகலை ஆசிரியர் ஏ.ஆருண் தாஸ் வரவேற்று பேசினார் பள்ளி முதல்வர் ஆர். விமலா ஆண்டறிக்கை வாசித்தார் .

விழாவில் நிறுவனரின் மகனும் ,பள்ளி அறங்காவலருமான எஸ். ஹிசாமுதீன் உபையதுல்லா, இயற்பியல் விரிவுரையாளர் சகீனா ஹிசாமுதீன் ஆகியோர் கலந்து கொண்டு திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற 100 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் , நற்சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினர்.

விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் சுகன்யா,சவுரா தஹமினா ஆகிய தொகுத்து வழங்கினர் .

விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் முடிவில் துணை முதல்வர் எஸ். பிரேமா நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *