வலங்கைமானில் திமுக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் ஒன்றிய,நகர வாக்கு சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது,
கூட்டத்தில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, நகரச் செயலாளர் பா. சிவனேசன், ஆதிச்சமங்கலம், விருப்பாச்சிபுரம், ஆலங்குடி உள்ளிட்ட 94 வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நன்னிலம் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் ஏ.கே. எஸ். விஜயன் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்டவர்களில் உரிய கவனம் செலுத்த அறிவுறுத்தினார். கடந்த ஆட்சியில் 7000 கோடி ரூபாய் வேளாண் கடனை தள்ளுபடி செய்த திமுக அரசு, தற்போது மகளிருக்கு உரிமைத் தொகையை வழங்கி வருகிறது,
திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது வாக்கு சாவடி முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி, வாக்காளர் பட்டியல் தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறும் விபரம் உள்ளிட்டவை தொடர்பான துண்டு பிரசுரங்களை ஏ.கே. எஸ். விஜயன் வழங்கினார்.