கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்வாக குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட 28 பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற பேச்சுப்போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் ஒன்றியத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளை துவங்கி வைத்தார், வட்டார கல்வி அலுவலர்கள் குமரேசன் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியில் மாணவர்கள் கலைஞர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய பங்கை பறை சாற்றும் விதமாக மாணவர்கள் பேச்சு, கட்டுரை,வினாடி வினா மற்றும் ஓவிய போட்டியில் கலந்துகொண்டு தங்களது படைப்புகளை நடுவர் குழுவிடம் சமர்ப்பித்தனர்.
இப் போட்டியில் குடவாசல் ஒன்றியத்தில் உள்ள 28 க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும்,தனியார் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் கலந்து கொண்டு 120 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு வட்டார வளமைய மேற்பார்வையாளர் பூபாலன், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.