செய்தியாளர் கே பாலமுருகன்.

சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

கடலூர்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஒன்றியம் வீராணநல்லூர் ஊராட்சியில் உட்பட்ட டி.மடப்புரம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்

இந்த கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நீண்ட காலத்துக்கு முன் அமைக்கப்பட்டது மிகவும் சேதமடைந்து காணப்படும் இந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த சில ஆண்டுகளாக இடிந்து விடு நிலையில் உள்ளது

அதில் உள்ள தூண்கள் விரிசல் ஏற்பட்டு உடைந்தும் சேதமடைந்து மேல்நிலை தொட்டியில் அடி பாகம் சிமெண்ட் பூச்சிகள் உடைந்தும் காணப்படுகிறது பாதுகாப்பற்ற பயனில்லாத இந்த குடிநீர் தொட்டி எந்த நேரத்திலும் விழுந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *