ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
உலக அமைதி வேண்டி திருவாரூர் நேதாஜி கல்லூரி மற்றும் மகரிஷி பள்ளியில் நவராத்திரியை முன்னிட்டு கொலு வைத்து வழிபாடு
திருவாரூர் நேதாஜி கல்லூரி மற்றும் மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியில் ஆயுத பூஜை விழா
திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி, மற்றும் மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியில் நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாள் கொலு வைத்து பூஜித்தும் மேலும் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பான முறையில் பூஜைகள் நடைபெற்றது .
இதில் மாணவ, மாணவிகள் நன்கு கல்வியறிவைப் பெறவும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியும் மற்றும் உலக. நலன் வேண்டியும்,அனைவரும் ஒற்றுமையுடன் கல்வி,செல்வம்,வீரம்,வெற்றி,மகிழ்ச்சி,நற்பண்பு, கீர்த்தி,அன்பு,உலக அமைதி,நாட்டின் வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் ஆகிவை மேற்கொள் காட்டி அனைவரும் பிரார்த்தனை மேற்கொண்டார்கள் பூஜையில் நேதாஜி கல்லூரியின் நிறுவனர்/ தாளாளர் முனைவர் வெங்கட்ராஜுலு செயலர் சுந்தர்ராஜ் முதன்மை செயல் அதிகாரி முனைவர் நிர்மலா ஆனந்த் நேதாஜி கல்லூரி இயக்குநரும் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர் விஜயசுந்தரம் மற்றும் நேதாஜி கலை கல்லூரி முதல்வர் முனைவர் சிவகுருநாதன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்நிர்மல் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் முதல்வர் முனைவர் ராமபிரபா மற்றும் துணை முதல்வர்கள், துறைத் தலைவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மாணவ/மாணவிகள் என அனைவரும் கலந்து கொண்டு வழிபட்டு சிறப்பித்தார்கள்