கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிப்பு….
கிறிஸ்தவர்கள் தங்களது இறந்த உறவினர்கள், மூதாதையரின் ஆன்மாக்களை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 2-ந் தேதி கல்லறைத் திருநாள் எனும் சகல ஆத்துமாக்களின் திருநாளை அனுசரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது தங்கள் முன்னோர்களின் நினைவாக கல்லறைகளை வர்ணம் பூசியும் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்களால் கல்லறைகளை அலங்கரித்தும் பிரார்த்தனை வழிபாடு நடத்துவார்கள்.
கல்லறை திருநாளையொட்டி, மதுரையில் உள்ள தத்தநேரி, மகபூப்பாளையம், பழங்காநத்தம், உள்ளிட்ட கல்லறை தோட்டங்களில் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்தும், மெழுகுவர்த்திகளை ஏற்றியும் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.