நீடாமங்கலம் நீலன் பள்ளி மாணவன் தேசிய தடகள போட்டிக்கு தேர்வு.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள, நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் ஏ.அகிலன் என்ற மாணவன், தமிழ்நாடு பள்ளி கல்வி துறையால் கடந்த 31 ஆம் தேதி செங்கல்பட்டு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மாநில அளவிலான தடகள போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் 12-ம் வகுப்பு மாணவன் ஏ. அகிலன் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாநில அளவில் வெள்ளி பதக்கம் (2-ம் இடம்)வென்றுள்ளார், அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் எஸ் ஜி எஃப் ஐ தேசிய அளவிலான போட்டிக்கு பங்கு பெற தகுதி பெற்றுள்ளார், பதக்கம் வென்ற மாணவன் அகிலனுக்கு பள்ளி தாளாளர் நீலன் அசோகன், செயலாளர் சுரேன் அசோகன் மற்றும் முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ- மாணவிகள் பாராட்டுகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *