கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், அகரம் அரசு இப்பள்ளியில் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125 ஆவது பிறந்தநாள்- குழந்தைகள் தினத்தை மாணவர்களிடையே பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர். க.பிரேம்குமார் தலைமையில் பல்வேறு போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி மகிழ்விக்கப்பட்டது.

இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு நேருவின் சிறப்பை பற்றியும் குழந்தைகளின் மகிமை பற்றியும் பல்வேறு கருத்துக்களை மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.

இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி இராமமூர்த்தி துணைத் தலைவர் எஸ் எம் சி. தலைவர் துணைத் தலைவர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவினை உதவி தலைமை ஆசிரியர் நடராஜன் நன்றி உரையாற்றினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *