தென்காசி மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மாவட்ட அளவிலான – முதலீடுகள் மாநாடு
தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சி ஸ்ரீ சாரதாம்பா கிராண்ட் மஹாலில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மாவட்ட அளவிலான முதலீடுகள் மாநாடு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனிநாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), மரு.சதன்திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்), ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன்,தென்காசி நகர் மன்றத் தலைவர் சாதிர், நகர்மன்றத் துணைத்தலைவர் சுப்பையா, தென்காசி ஒன்றியக் குழுத்தலைவர் ஷேக் அப்துல்லா, இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய், இலஞ்சி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முத்தையா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சண்முகவடிவு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனச் சங்கத் தலைவர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.