எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி முதல் பூம்புகார் வரையிலான 16 மீனவ கிராம மீனவர்கள் 7 வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. மீன்வளத்துறை எச்சரிக்கை மற்றும் கடும் கடல் சீற்றம் காரணமாக படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையார் முதல் பூம்புகார் வரை 16 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன.இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த மண்டலம் காரணமாக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த 26.11.2023 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை அறிவித்திருந்தது.

அதன்படி சீர்காழியை அடுத்த பழையார்,தொடுவாய்,திருமுல்லைவாசல்,கீழமூவர்கரை,புதுக்குப்பம்,வானகிரி,பூம்புகார் வரையிலான 16 கிராம மீனவர்கள் இன்று 7 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில் இன்று காலை பழையார் முதல் பூம்புகார் வரையிலான கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் 350 விசை விசைப்படகுகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக கரையில் நிறுத்திவைத்துள்ளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *