ஆலங்குளத்தில் செல்லம் சட்டஅலுவலகம் திறப்பு விழா;-

தென்காசி முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மாநாதன் திறந்து வைத்தார்.

ஆலங்குளம் தென்காசி சாலையில் செல்லம் சட்ட அலுவலகம் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் சிவபத்மாநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய சட்ட அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

காமராஜர் மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனர் தலைவரும் மூத்த வழக்கறி ஞருமான வக்கீல் ராஜா வரவேற்றார். ஆலங்குளம் மண்ணின் மைந்தரும் வடசென்னை மாவட்ட காங்கரஸ் கமிட்டி தலைவரும் சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ் திரவியம் தொலைபேசி வழியாக வாழ்த்துக்களை தெரிவித்தார்.

விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் வழக்கறிஞர்கள் கருப்பசித்தன், மணிகண்டன். அருணாதேவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

இந்த விழாவில் ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் ராஜதுரை, மோகன்லால், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் தங்கசெல்வம், அமமுக நகர செயலாளர் எம்.எஸ். சுப்பையா, கவுன்சிலர்கள் சுந்தரம், விஜிஎஸ் கணேசன், சுபாஷ் சந்திரபோஸ், தொழிலதிபர் நத்தம் குமார், வேலு, ஆலங்குளம் நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ், வட்டார காங்கிரஸ் தலைவர் ரூபன் தேவதாஸ், எம்ஜிஆர் மக்கள் சக்தி நிறுவனர் தலைவர் மேஜர் ரவிக்குமார், அரசு வழக்கறிஞர் ஆலடி மானா, ஆலங்குளம் நகர திமுக செயலாளர் வக்கீல் நெல்சன். திமுக மாவட்ட பிரதிநிதி அன்பழகன், உதயநிதி ஸ்டாலின் மன்றம் ஆலங்குளம் ஒன்றியசெயலாளர் அரவிந்த் ராஜ்திலக் பூல்பாண்டி, பாஜக நிர்வாகிகள் கண்ணன் லிங்கவேல் ராஜா, குட்டிப்புலி கார்த்திக், ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் ஆரோக்கியசாமி, சுபாஷ் சந்திரபோஸ், சத்தியா, சேர்மராஜா, ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள், ஆலங்குளம் மாவட்ட உரிமையில் நீதிமன்றம் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் உதவியாளர்கள், செல்லம் சட்ட அலுவலகம் உதவியாளர் ஆறுமுகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *