ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.
திருவாருர் நகராட்சி அலுவலகம் எதிரில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி
திருவாருர் நகராட்சி அலுவலகம் எதிரில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ துவக்கி வைத்தார்கள். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் உடனிருந்தார்.
பேரணியில் செஞ்சிலுவை சங்கத்தினை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர். பேரணியானது, நகராட்சி அலுவலகம் எதிரில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
திருவாரூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுகள் இல்லாத, எய்ட்ஸ் நோய் உள்ளவர்களை புறக்கணித்தல் இல்லாத, எய்ட்ஸ் நோய் தொடர்பான இறப்புகள் இல்லாத நிலையை உருவாக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமல் பாதுகாப்புடன் உள்ளார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பாதிக்கப்பட்ட நபர்களின் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி உதவித்தொகை மருத்துவ சிகிச்சைகளுக்காக நிதியுதவியும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற சென்று வருவதற்காக கட்டணமில்லா பேருந்து பயண அட்டையும் அளிக்கப்படுகின்றது. புதிய நோயாளிகள் உருவாகாமல் தடுக்க பொதுமக்கள் மத்தியில் எய்ட்ஸ் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.
முன்னதாக. ஆட்டோவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த ஒட்டுவில்லைகளை மாவட்ட ஆட்சியர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
பின்னர், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் புத்தகங்கள் அடங்கிய தற்காலிக விழிப்புணர்வு கண்காட்சி அரங்கத்தினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்
நிகழ்ச்சியில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் மரு.புகழ் நகராட்சி ஆணையர் மல்லிகா மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் .கலியபெருமாள் திருவாரூர் நகர்மன்றத்தலைவர் புவனப்பிரியா செந்தில் திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர் கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ், திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன் மாவட்ட மேற்பார்வையாளர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு ராமஜெயம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்