அலங்காநல்லூர்
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தனிப்பெருங்கன்மையுடன் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பாரதிய ஜனதா கட்சியினர் அங்குள்ள ஸ்ரீ முனியாண்டி சுவாமி கோவிலில் மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் தலைமையில் சிறப்பு பூஜை செய்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மாவட்ட துணை தலைவர் கோவிந்தமூர்த்தி, மாவட்ட பொது செயலாளர் கோஷபெருமாள், மண்டல் அமைப்பாளர் ரவிசங்கர், மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி, மீனவர் ஆணி மாநில துணை தலைவர் சண்முகானந்தம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மண்டல் தலைவர் சுபாஷ்சந்திரபோஸ், மண்டல் பொது செயலாளர்கள் இருளப்பன், முகுந்தன், துணை தலைவர் சரவணன், விவசாய அணி சாந்த குமாரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.