எஸ். செல்வகுமார் சீர்காழி செய்தியாளர்
சீர்காழி அருகே திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் (புதன் ஸ்தலத்தில்) கோவிலில் தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து பிரகாரத்தில் வலம் வந்து சிறப்பு வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை சமேத வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. நவகிரகங்களின் புதன் ஸ்தலமாக விளங்கக்கூடிய இக்கோவிலில் அகோர முகம் கொண்டு சிவபெருமான் அகோர மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாளித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அன்று அகோர மூர்த்திக்கு பால் அபிஷேக திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நான்கு வீதிகளில் பலம் வந்து பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு. செய்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்திகை மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று நடைபெற்ற பால்குட திருவிழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து கோவிலின் உள்பிரகாரத்தில் பால் குடத்துடன் வலம் வந்து சிறப்பு வழிபாடு நடத்தினார்..