ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்ட தமுமுக நடத்திய வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கக் கோரி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!
டிசம்பர்-6 வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கக் கோரி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருவாரூர் மாவட்டத்தின் சார்பாக திருவாரூரில் தமுமுக மமக மாவட்ட தலைவர்.முஜிபுர் ரகுமான் தலைமையில் நடைபெற்றது
நிகழ்வில் முத்துப்பேட்டை நகர தலைவர் முகமது அலீம் கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.
தமுமுக மாவட்ட செயலாளர் சீமான், மமக மாவட்ட செயலாளர் குத்புதீன்,தமுமுக மமக மாவட்ட பொருளாளர் முகமது நியாசுதீன், மாநில விவசாய அணி துணை செயலாளர் நவாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நைனா முகமது,ஹாஜா அலாவுதீன், முன்னாள் மாவட்ட தலைவர் பஜ்லுல் ஹக் மற்றும் மாவட்ட துணை நிர்வாகிகள் முன்னிலையில் வைத்தனர்
தமுமுக தலைமை பிரதிநிதி கோவை.சாதிக் அலி மற்றும் மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி மாநில செயலாளர் தீன் முகமது தஞ்சை மண்டல செயலாளர் முகமது ரியாஸ்
விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் டாக்டர் அம்பேத்கர் மக்கள் நலச்சங்கம் மாநில பொது செயலாளர் வீ.விக்னேஷ், நாகை திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், மக்கள் அதிகாரம் மு.ஆசாத் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில,மாவட்ட, நகர, ஒன்றிய,பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபாட்டுரிமைப் பாதுகாப்புக்கு வலிமை சேர்த்தனர்
நிகழ்வின் இறுதியாக நகர தலைவர் ஹாஜா நஜிபுதீன் நன்றி கூறினார்