ச. முருகவேலு செய்தியாளர் நெட்டப்பாக்கம்
புதுவை முன்னாள் முதல்வரும் தியாகியுமாகிய வெ. வெங்கடசுப்பா ரெட்டியார் 114 வது பிறந்தநாள் விழா மடுகரையில் மூன்று இடங்களில் கொண்டாடப்பட்டது.
மடுகரை முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அங்குள்ள வெங்கடசுப்பா ரெட்டியார் உருவ சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மடுகரை மந்தவெளி பகுதியில் தியாகி வெங்கடசுப்பா ரெட்டியார் உருவப்படத்திற்கு தியாகிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்,ஊர் பிரமுகர்கள் மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயவேணி முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து மடுகரை மந்தவெளியில் 500 ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் மடுகரை ராம்ஜி நகர் அம்பேத்கர் சிலை அருகே தியாகி வெங்கடசுப்பாரெட்டியார் உருவப்படம் வைத்து பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மைநாதன், மடுகரை வெங்கடகிருஷ்ணா ரெட்டியார், ஜெயராம், ராஜகோபால்,முன்னாள் கவுன்சிலர் கோவிந்தசாமி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தட்சிணாமூர்த்தி, ஜெகந்நாதன், கரியமாணிக்கம் ஶ்ரீதர், பாட்சா, நெட்டப்பாக்கம் பிரகாசம், ராமச்சந்திரன், சூரமங்கலம் குமாரகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் அனுசுயா, பண்டசோழநல்லூர் பிரபாகர், சதாசிவம், சுரேஷ்,அய்யப்பன் வடுகுப்பம் ராமகிருஷ்ணன், கல்மண்டபம் சங்கர்,சபரி, நத்தமேடு திருவரசன், ஏரிப்பாக்கம், ராமானுஜம் தட்சிணாமூர்த்தி,கரிகாலன் உட்பட திரளாக பலர் கலந்து கொண்டனர்