புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக வர்த்தகர் அணியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வில்லியனூர் சண்முகா திருமண நிலையத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அணி அமைப்பாளர் ரமணன் தலைமை தாங்கினார். அணித் தலைவர் செல்வமுத்துகுமார விநாயகம், துணைத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வர்த்தகர் அணி துணை அமைப்பாளர்கள் ஜெயபிரகாஷ், சத்தியகுமார், ஹாஜி முஹம்மது, ஹரி, சுப்பரமணியன், சிதம்பரநாதன், சரவணண் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 24–ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் கழக இளைஞர் அணி மாநாட்டில் வர்த்தகர் அணி சார்பில் 500 பேர் பங்கேற்பது, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி நடத்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குவது, மிக்ஜாம் புயலை எதிர்கொண்டு மிகச் சிறப்பாக செயலாற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கும், சென்னை மேயர், அமைச்சர் பெருமக்களுக்கும், அனைத்துத் துறை அரசு ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிப்பது, தொகுதி வாரியாக வர்த்தக அணி நிர்வாகிகள் நியமிப்பதற்கு மாநில அமைப்பாளரிடம் அனுமதி கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *