பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட. முகாம் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடைபெற்றது .
பாபநாசம்
ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பேரூராட்சித் துணைத் தலைவர் பூபதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார் பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் வரவேற்று பேசினார்.
தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிக்குழுத் துணை தலைவர் முத்துச்செல்வம் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
முகாமில் எரிசக்தி துறை, மின்சார வாரியம், குடிநீர் வழங்கல் துறை,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, கூட்டுறவுத்துறை ,மாவட்ட தொழில் மையம், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர் .
இந்த முகாமில் பாபநாசம் பொறுப்பு வட்டாட்சியர் முருககுமார், சட்டமன்ற உறுப்பினர் நேர் முக உதவியாளர் முகமது ரிபாயி, சுகாதார ஆய்வாளர் பரமசிவம், மாவட்ட துணை செயலாளர்கள் கோவி.அய்யாராசு , துரைமுருகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.