சென்னையில் கட்சி (அரசியல்) சார்பற்ற சம்யுக்த் கிசான் மோர்ச்சா எனப்படும் ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் பத்திரிகை நிருபர்கள் சங்கத்தின் கூட்ட அரங்கத்தில் நடந்த விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நிகழ்ச்சியில் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் விவசாயிகள் அணியின் மாநில தலைவர் டாக்டர்.எஸ். ஆனந்த்குமார் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பிரதிநிதியாக அழைக்கப்பட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆதரவளித்து ஆலோசனைகள் வழங்கினார்.
யூனியன் பிரதேச விவசாயிகளின் பிரச்சனைகளை தேசிய அளவில் பிரதிபலிக்க இந்த கூட்டமைப்பில் விவசாயிகள் இணைந்தால் அந்த கட்டமைப்பு எதிர்காலத்தில் அவர்களுக்கு அது உதவும் என்றார்