கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 136வது பிறந்தநாளான இன்று கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் சாஸ்த்ரா ராமானுஜன் விருது வென்ற அமெரிக்கா பேராசிரியர்கள்.
கணிதவியலின் சர்வதேச உயர் விருதான ‘பீல்டு’ விருதுக்கு பிறகு முக்கிய விருதாக இந்த சாஸ்த்ரா ராமானுஜன் விருது உள்ளது. இதுவரை இந்த விருது பெற்ற நால்வர் ‘பீல்டு ‘விருது பெற்றது குறிப்பிடத்
தக்கது.
32 வயதிர்க்கு உட்பட்ட ராமானுஜனின் எண்ணியல் கோட்பாட்டின் சிறந்த கணிதவியல் ஆராய்ச்சியாளருக்கு
இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது பெரும் இளம் கணிதவியல் வல்லுநர் அமெரிக்கா புளோரிடா பல்கலை பேராசிரியர் கிருஷ்ணசாமி அல்லாடி தலைமையிலான குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்.
கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 136வது பிறந்தநாளான கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் சாஸ்த்ரா ராமானுஜன் விருது வென்ற அமெரிக்கா பேராசிரியர்கள் ருய்சி சங் (2023), யன்குவின் டேங் (2022)ஆகியோர் விருது பெற்றனர். மேலும் 10,000 அமெரிக்க டாலர் மற்றும் பட்டயத்தை வழங்கினர்.
விழாவில் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை முன்னாள் செயலாளர் முனைவர் ராமசாமி மற்றும் பேராசியர்கள் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.