பாபநாசம் ஆப்தீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா..

பள்ளி மாணவ, மாணவிகளின் மெய்சிலிர்க்க வைக்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆப்தீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவினை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா துவங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று கும்மியடித்து குலவி சத்தம் போட்டு பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.

அதனை தொடர்ந்து தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் கோலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்கும் வகையில் யோகா நிகழ்ச்சிகள் உள்ளிட்ட மாணவ, மாணவிகளின் பல்வேறு போட்டிகள் மற்றும் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் இஸ்லாமிய பெண்கள் உள்பட பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *