வி. தங்கப்பிரகாசம், செய்தியாளர், புதுச்சேரி
புதுச்சேரி
புதுச்சேரியில் உள்ள கடற்கரைப் பகுதிகளில், நெடுங்காலமாகவே, கடல்சீற்றங்களால் ஏற்படும் கடலரிப்பின் காரணமாக வீடுகளும், பல இடங்களில் தெருக்களும் கூட கடலில் மூழ்கியுள்ளன.
தற்போதும் கூட கடலரிப்பு நீடித்து, கடற்கரையை இழந்து, படகு, வலைகள் வைக்க இடமின்றி, கடற்கரையில் வசிக்கும் மக்கள் தவிக்கின்றார்கள்.
இக் கடலரிப்பைத் தடுக்க ‘துாண்டில் வளைவு’ அமைக்கக் கோரியும்;மேலும், மீனவ மக்களை பழங்குடியினர் வரிசைப் பட்டியலில் சேர்க்கக் கோரியும் கடல் எல்லைகள் குறித்து ஒன்றிய அரசு தயாரிக்கும் வரைபடம் தொடர்பாக மீனவ மக்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும்
என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ,
காலாப்பட்டு, ஜெயா தியேட்டர் எதிரில், மாநில மீனவர் காங்கிரஸ் சார்பில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி,சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா னந்தராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் .பாலன், கார்த்திகேயன், தேசிய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் காங்கேயன், புதுச்சேரி பிரதேச மீனவர் காங்கிரஸ் தலைவர் பாஸ்கரன், காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் பொன்னி சுப்புராயன், மீனவர் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.