சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் A.சுரேஷ் குமார் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது ,
அன்பும் பாசமும் கலாச்சாரமும் கருணையும் மொத்தமாக கொண்ட ஒரே பண்டிகையாக கொண்டாடும் தமிழர்களின் தலைசிறந்த பண்டிகை பொங்கல், இந்தத் பொங்கல் திருநாளில் வாழ்வின் எல்லா வளமும் பெற்று தன்னம்பிக்கையோடு சமத்துவ பொங்கல் இட்டு வறுமை ஒழித்து சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபடும் அனைத்து மக்களுக்கும் நன்றி கூறும் விழாவாக, உழவர் திருநாளில் அனைத்து விவசாய பெருமக்களுக்கும் நன்றி கூறும் விழாவாக பெருமையுடன் கொண்டாடி சிறப்புற்று வாழ சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக இனிக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவிப்பதாக தமது அறிக்கையில் கூறியிருந்தார் , உடன் பி.ஆர்.ஓ. டாக்டர் டி .ஜி.மனோகர் , தமிழ்நாடு மாநில தலைவர் அகமது ரியாஸ் , செங்கல்பட்டு மாவட்ட தலைவர் அம்பேத்கணிகா உடன் இருந்தனர்.