பாபாநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் இராமலிங்கசுவாமிகள்
108 ஆலயத்தில் சிறப்பு வழிபாடு.
அயோத்தியில்
ஸ்ரீராமபிரான் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நேரத்தில் பாபநாசம் இராமலிங்கசுவாமிகள் 108 ஆலத்தில் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் சார்பில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேசிய திருக்கோயிலகள் கூட்மைப்பின் மாநில
துணைத்தலைவர் துரை கோவிந்தராசன் தலைமையில் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநில வழக்கறிஞர் அணித்தலைவர் வழக்கறிஞர் டாக்டர். டி.மகேந்திரன் முன்னிலையில் நடை பெற்றது.
நிகழ்ச்சியில் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு பாண்டிச்சேரி மாநிலத்தலைவர் தமிழ்ச்செம்மல் புலவர் ஆதிநெடுஞ்செழியன் சிறப்பு விருந்தினராக்க் கலந்து கொண்டு கம்பராமாயணப்பாடல்களைப்பாடி இராமனது பெருமையைப்பற்றி பக்தியுரை நிகழ்த்தினார. நிகழ்வில் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தஞ்சை மாநகராட்சித்தலைவர் கே.ஆர் ஜி.காசிராஜா மாவட்ட இணைச்செயலர் ரவிக்குமார் மற்றும் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.