கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ. முகேஷ் .
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூரில் உள்ள மீரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பாக மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டு கருத்தரங்க நிகழ்ச்சி (தனுன்ஜெயாவில் +2 மாணவ , மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 300 பேர் கலந்து கொண்டனர், பல முக்கிய கல்வி நிறுவனங்கள் பங்கேற்றனர்
கல்வி வழிகாட்டி 2024 புகழ் பெற்ற மீரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையின் இயக்குனர் மற்றும பெண்களுக்கான பிரபல மருத்துவர் அம்பிகா பாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து, பின்பு தமிழ் ஆங்கிலத்தில் உரையாடினார்
மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சிறப்பாக பேசினார், அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் ரசித்து கேட்டு கைதட்டினர்.
மேலும் பிரபல ஊக்குவிக்கும் பேச்சாளர்கள் பேராசிரியர் சம்பத்குமார் மற்றும் அஸ்வின் பேசினர். புகழ் பெற்ற ரிசி நிகழ்ச்சி ஏற்பாடு நிறுவனத்தின் தலைவர் சதீஷ் மற்றும் குழுவினர் சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஓசூர் – ராயக்கோட்டை ரோடு, மீரா மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையின் சீனியர் மார்க்கெட்டிங் மேனேஜர் கோபாலகிருஷ்ணன் மற்றும் திருமூர்த்தி ஆகியோர் பக்கபலமாக இருந்தனர்.