பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாபேட்டை ஒன்றியம் புளியக்குடி ஊராட்சி சிக்கப்பட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்காடியை சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்.இதில் ஒன்றிய குழு உறுப்பினர் கலைச்செல்வன் குத்துவிளக்கு ஏற்றினார்.நிகழ்ச்சியில்வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன், விஜய் (தெ)ஒன்றிய செயலாளர் பி.எஸ் குமார்,மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பாதுஷா ரிபாய், பழனியப்பன் உட்பட பலரும் இருந்தனர்.