உலக நோயாளிகள் தினத்தை முன்னிட்டு. ஜே.சி.ஐ. ஒரத்தநாடு சார்பில் தஞ்சை மருத்துவகல்லூரியில் நோயாளிகளுக்கு மதிய உணவு
வழங்கப்பட்டது
தஞ்சாவூா்,உலக நோயாளிகள் தினத்தை முன்னிட்டு ஒரத்தநாடு ஜேசிஐ , பிச்சை பவுண்டேஷன் மற்றும் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் இணைந்து
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜே.சி.ஐ ஒரத்தநாடு தலைவர் டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் , பிச்சை பவுண்டேசன் செயலாளர் வெற்றிச்செல்வன் , தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ .கே .ஆர் ரவிச்சந்தர் ஆகியோர் முன்னிலையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகள், அவர்களது உறவினர்களுக்கு உணவு மதிய உணவு வழங்கப்பட்டது.
தொடர்ந்து வாரந்தோறும் இதேபோல் நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.