தே.மு.தி.க. கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்வு.

செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் தெற்கு ஒன்றியம்
மறைந்த முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நல்லாசியுடன் கொளத்தூர் மாளச்சேரி ஊராட்சியில் வேதா லட்சுமி தம்பதி புதுமனை புகுவிழா மற்றும் தேமுதிக கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னதாக செங்கை மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.எ.வுமான
அனகை டி.முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேமுதிக கழக கொடியினை ஏற்றிவைத்து அங்கு கூடியிருந்த பொது மக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதில் இலத்தூர் ஒன்றிய கழக செயலாளர் மா.மூர்த்தி தலைமை தாங்கினார். அவைத் தலைவர்
ஆர்.அன்புசெழியன்,இலத்தூர் ஒன்றிய பொருளாளர்
டி.செல்லப்பன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி செயலர் பூபாலன் கிளை செயலாளர் தவமணி அனைவரையும் வரவேற்றனர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பிரகாஷ்,
மாநில மீனவர் அணி செயலாளர்
டி.கஜேந்திரன், முன்னாள்தொகுதி பொறுப்பாளர் சிவா,மாவட்ட நிர்வாகி டி.வேதா ஆக்கிணாம்பட்டு கிளை செயலாளர்இ.மணி, மற்றும் மகளிர் அணியினர் கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *