பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவின்படி காவல் துறை மற்றும் பொதுமக்கள் இடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதில் காவல்துறைக்கும் பொது மக்களுக்கும் நல்லுறவை பேணும் வகையிலும், இளைஞர்களிடையே விளையாட்டு மேம்பாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும் காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே கையுந்து பந்து விளையாட்டு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் , காவல்துறை அணிகள் என 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள் இறுதியாக முதல் நான்கு இடங்கள் வெற்றி பெற்ற அணிகளுக்கு அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் வெற்றி கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட கையுந்து பந்து கூட்டமைப்பு தலைவர் பூமிநாதன் மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இப் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது காவல்துறை அணி,இரண்டாம் இடம் எம்ஆர்சி கல்லூரியின் மாணவர்கள் அணிமூன்றாம் இடம் பிடித்தது வளவெட்டி குப்பம் அணி,நான்காம் இடம் பிடித்தது விக்கிரமங்கலம் அணி ஆகிய வெற்றி பெற்ற வீரர்களுக்கு
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்
இந்நிகழ்வில் ஆயுதப்படை ஆய்வாளர் பாலு, ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.